petrolவிற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது. பெட்ரோலுக்கு தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,028 கமிஷன் வழங்கப்படுகிறது. அது ரூ.1,098 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, டீசலுக்கு தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 கமிஷனாக வழங்கப்படுகிறது. அது ரூ.670 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கமிஷன் உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஏற்படும் நஷ்டம், நுகர்வோர் மீது திணிக்கப்படுவதால் இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

email-virusநம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பு‌ம் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும் எச்சரித்துள்ளது.

இந்த இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங் மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி விடுவர்.

சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு சிலவற்றின் பெயர்கள் வருமாறு:

17ebook.com

aladel.net

bpwhamburgorchardpark.org

clicnews.com

dfwdiesel.net

divineenterprises.net

fantasticfilms.ru

gardensrestaurantandcatering.com

ginedis.com

gncr.org

hdvideoforums.org

hihanin.com

kingfamilyphotoalbum.com

likaraoke.com

mactep.org

magic4you.nu

marbling.pe.kr

nacjalneg.info

pronline.ru

purplehoodie.com

qsng.cn

seksburada.net

sportsmansclub.net

stock888.cn

tathli.com

teamclouds.com

texaswhitetailfever.com

wadefamilytree.org

xnescat.info

yt118.com

பிளாஸ்டிக்

plastic-bagsஆடித் தள்ளுபடிக்கு இரண்டு கைகளிலும் பத்து பிளாஸ்டிக் பைகளை அள்ளி வருகிறோம். இந்த பிளாஸ்டிக் பைகள், நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த ஐந்தாவது ஆண்டு என்ன நிலையில் இருக்கும் என நினைத்துப் பார்த்ததுண்டா.

ஆகஸ்ட் பதினைந்திற்கு எல்லோருடைய கைகளிலும் ஒன்றுக்கு இரண்டாக கொடிகள். பெரும்பாலும் பிளாஸ்டிக் கொடிகள். தேசப் பற்று எனும் பெயரில் தேசத்தின் முதுகில் எத்தனை டன் பிளாஸ்டிக் இறக்கி வைக்கிறோம். நமக்கிருக்கும் வேலையில் இதையெல்லாம் யோசிக்க ஏது டைம் என நினைக்கும் போது சட்டென வில்லனாகிவிடுகிறோம்.

உலகில் பல நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடையும் வரிகளும் விதித்திருக்கின்றன. இருந்தாலும் நிலமை சீரடையவில்லை. உலகின் வளர்ந்த நாடான யூ.கேவில் ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 13 பில்லியன். உலகில் ஒரு நாள் சேரும் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் ஐயாயிரம் டன் !

சகட்டு மேனிக்கு வாட்டர் பாட்டில்கள் வாங்குவதையும், குப்பை போட உதவும் என ஒன்றுக்கு இரண்டாய் பிளாஸ்டிக் பைகள் வாங்குவதையும் நிறுத்தினாலே போதும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்த…

அடுத்த முறை பிளாஸ்டிக் பை ஒன்றைக் கையில் எடுக்கும் போது நினைவில் கொள்வோம். ஒரு பை அழிய எடுத்துக் கொள்ளும் காலம் ஆயிரம் ஆண்டுகள்.

குளோபல் வார்மிங்

global_warmingகுளோபல் வார்மிங் என்றவுடன் இதெல்லாம் தலைவர்கள் சமாச்சாரம் என்று ஒதுங்கிவிடுவது தான் நமது இயல்பு. உண்மையில் இது தலைவர்கள் சமாச்சாரமே கிடையாது. நீங்களும் நானும் சம்பந்தப்பட்ட விஷயம் தான் இது. பூமியை மாசுபடுத்துவது, காற்றை மாசுபடுத்துவது, நதிகளை மாசுபடுத்துவது இவையெல்லாம் தான் குளோபல் வார்மிங்கின் முக்கியமான காரணிகள்.

வெள்ளப்பெருக்கு, சுனாமி, சுழல்காற்று, உணவுப் பற்றாக்குறை, கடல் மட்டம் உயருதல், துருவங்கள் உருகுதல் என இதன்
விளைவுகள் படுபயங்கரமானவை. இது தேச பாதுகாப்புக்கும் மாபெரும் வில்லனாக வந்து நிற்கிறது என கடந்த வாரம் அமெரிக்கா தெரிவித்திருந்தது. குளோபல் வார்மிங் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என அமெரிக்கா சொல்லியிருப்பது இதுவே முதல் முறை !

இன்றைய இதே நிலையில் போனால் 2040ல் பூமி உதவாக்கரையாகிவிடும். அதன் பின் பூமியைத் திருப்பி பழைய நிலைக்குக் கொண்டு வருவது கூட சாத்தியமற்றதாகி விடுமாம். இப்போதே காலநிலையில் நிலவும் ஒழுங்கற்ற மாற்றங்களால் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாகியிருக்கிறது. இதைத் தடுக்க அமெரிக்கா துவங்கி உலக நாடுகளெல்லாம் கரம் கோர்த்து நிற்க, நாமும் நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்.

அட ! அணில் கூட மண் சுமக்கலையா ?

இ-வேஸ்ட்

e-wasteமூன்று மாதங்களுக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவது தான் இப்போதைய இளசுகளின் டிரெண்ட். வாங்கி நான்கு வருடங்களாகிவிட்டால் கம்ப்யூட்டரும் குப்பைக்கு. இருக்கும் பிரச்சினை போதாதென்று சிடிக்கள், வயர்கள், எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் என பூமிக்குப் பாரமாய் எலக்ட்ரானிக் குப்பைகள். உலகில் ஆண்டு ஒன்றுக்கு சேரும் எலக்ட்ரானிக் வேஸ்டின் எடை மட்டுமே ஐந்து கோடி டன் ! இன்னும் இரண்டே ஆண்டுகளின் இந்த கணக்கு மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.

இந்த எலக்ட்ரானிக் பொருட்களில் சுமார் ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் உண்டு. அலர்ஜி முதல் கான்சர் வரை பல்வேறு நோய்களின் தாய் இந்த எலக்ட்ரானிக் வேஸ்ட். இதைப் புதைத்தால் பூமி மாசுபடும், எரித்தால் விஷப் புகை வந்து காற்றை மாசுபடுத்தும். இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் தேவை முடிந்து விட்டால் மறு சுழற்சிக்கு ஒப்படைப்பது மட்டுமே தீர்வு.

அடுத்த முறை எதையும் சும்மா எறியாதீங்க.

நன்றி : சேவியர்

ஸ்டாக்ஹோம்:இந்த ஆண்டுக்கான, இயற்பியல் துறையில் சாதனை புரிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நுண்ணிழை (பைபர்-ஆப்டிக்ஸ் ) கம்பிவடம் வழியாக ஒளிகடத்தல் தொடர்பான ஆராய்ச்சி யில் ஈடுபட்ட, சார்லஸ் கே கவோ என்பவருக்கும் , செமிகண்டக்டர் சர்க்யூட் எனப்படும், சி.சி.டி., சென்சாரைக் கண்டு பிடித்த வில்லர்டு எஸ் பாய்லே, ஜார்ஜ் இ ஸ்மித் என்ற இரண்டு விஞ்ஞானிகளுக்கும், நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அகடமி அறிவித்துள்ளது.

இந்த விருது, ஐந்து கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புடையது. இதில் பாதித் தொகை கவோவுக்கும், மீதித் தொகை மற்ற இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

கூகுலின் லோகோ இன்று ம‌ட்டும் கோடுகளாக காணப்ப‌டுவதை கண்டு நீங்கள் குழம்பியிருந்தீர்கள் என்றால் அதற்கான விளக்கம் பார்கோடு முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட தினமான அக்டோபர் 7 ம் தேதியை கொண்டாடும் வ‌கையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்லது என்பதே.

பார்கோடு தொழில்நுட்பம் நவீன வாழ்வில் பல்வேறு இடங்களிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த‌ க‌ண்டுபிடிப்பின் காப்புரிமை தின‌த்தை அங்க‌ரிக்கும் வ‌கையில் கூகுல் த‌ன‌து லோகோவை பார்கோடு போல‌ மாற்றியுள்ள‌து.

பார்கோடை ப‌டிக்க‌ உத‌வும் க‌ண்டுபிடிப்பை நிக‌ழ்த்திய‌ சார்ல‌ஸ் க‌வோ,ஜார்ஜ் ஸ்மித்,வில்ல‌ர்ட் பாய‌ல் ஆகிய‌ விஞ்ஞானிக‌ளுக்கு இந்தா ஆண்டுக்கான‌ இய‌ர்பிய‌ல் நோப‌ல் ப‌ரிசு வ‌ழங்க‌ப்ப‌ட்டுள்ள நிலையில் இந்த‌ க‌வுர‌வ‌த்தை கூகுல் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

Dolphinடெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள், குறிப்பாக கங்கையின் ஆரோக்கியத்திற்கு டால்பின்களின் சேவை மிகப் பெரியது.

இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

டால்பினை தேசிய நீர் விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான் முன்வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது என்றார்.

அடுத்த பக்கம் »